தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில், பி.எஃப்.எஸ்சி. என்று அழைக்கப்படும் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்பில் சேர விரும்பும் பிளஸ் 2 படித்த மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 4 ஆண்டுகளுக்கான முழு நேரப் பட்டப் படிப்பு இது. மொத்தமுள்ள இடங்கள் 40.
உயிரியல் அல்லது விலங்கியல் மற்றும் தாவரவியல் படிப்புகளில் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் இதரப் பொதுப் பிரிவினர் 60 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 55 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். வேதியியல், இயற்பியல் ஆகிய இரண்டு பாடங்களிலும் சேர்த்து பிற்படுத்தப்பட்டோர், பொதுப் பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களையும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 55 சதவீத மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2014
விவரங்களுக்கு: www.tnfu.org.in
சேலத்திலுள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்பப் பயிலகத்தில், கைத்தறி மற்றும் துணி நூல் தொழில்நுட்ப ஓராண்டு டிப்ளமோ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு பத்தாம் வகுப்பு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், 01.07.2014-ஆம் தேதியன்று 15 முதல் 23 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் வயது 15 முதல் 25-க்குள் இருக்கவேண்டும்.
தமிழக அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். மாநிலத்திற்கான மொத்த இடஒதுக்கீட்டில் கைத்தறி நெசவாளர் சமூகத்தைச் சேர்ந்தோர், பாரம்பரியமாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பத்தைச் சேர்ந்தோர் அல்லது நெசவுத் தொழிலில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அவர்களுக்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.
சேலத்திலுள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்பப் பயிலகத்திற்கு 26 இடங்களுக்கும், ஆந்திர மாநிலம் வெங்கடகிரியில் உள்ள எஸ்.பி.கே.எம். இந்திய கைத்தறி தொழில்நுட்பப் பயிலகத்தில் 4 இடங்களுக்கும், கர்நாடக மாநிலம் கடாக்கிலுள்ள கர்நாடகா கைத்தறி தொழில்நுட்பப் பயிலகத்தில் 8 இடங்களுக்கும், கேரள மாநிலம் கன்னூரிலுள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்பப் பயிலகத்தில் 6 இடங்களுக்கும் தமிழக தகுதிப் பட்டியலிலிருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை ‘கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகம், குறளகம், 2-ஆம் தளம், சென்னை - 600 018’ என்ற முகவரியில் அனைத்து வேலை நாட்களிலும் நேரடியாகவோ அல்லது ரூ.5 அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட அஞ்சல் உறையை அனுப்பியோ 10.06.2014-க்குள் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2014
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை