பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மூலம் புதுச்சேரியில் வரும் 29-ஆம் தேதி பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (நெட்) நடைபெறவுள்ளது.
இதில் 4,984 பேர் பங்கேற்க உள்ளனர். இது குறித்து புதுவை பல்கலைக்கழகத்தின் யுஜிசி நெட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் அரிகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு மூலம், பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (நெட்) ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான யுஜிசி நெட் தேர்வு வரும் 29-ஆம் தேதி நாடு முழுவதும் நடக்கிறது.
புதுச்சேரியில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளி, இதயா கல்லூரி, போப் ஜான்பால் கல்லூரி, ஆச்சார்யா பொறியியல் கல்லூரி, சாரதா கங்காதரன் கலைக் கல்லூரி ஆகிய 6 துணைத் தேர்வு மையங்களில் இத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை, புதுவை பல்கலைக்கழக துணை மையங்களில் மொத்தம் 4,984 பேர் எழுதுகின்றனர். முதல் தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரையும், இரண்டாம் தாள் காலை 10.45 முதல் மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மூன்றாம் தாள் பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரையும் நடக்கிறது. இது தொடர்பான மேலும் விவரங்களை புதுவை பல்கலைக்கழக இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 4,984 பேர் பங்கேற்க உள்ளனர். இது குறித்து புதுவை பல்கலைக்கழகத்தின் யுஜிசி நெட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் அரிகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு மூலம், பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (நெட்) ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான யுஜிசி நெட் தேர்வு வரும் 29-ஆம் தேதி நாடு முழுவதும் நடக்கிறது.
புதுச்சேரியில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளி, இதயா கல்லூரி, போப் ஜான்பால் கல்லூரி, ஆச்சார்யா பொறியியல் கல்லூரி, சாரதா கங்காதரன் கலைக் கல்லூரி ஆகிய 6 துணைத் தேர்வு மையங்களில் இத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை, புதுவை பல்கலைக்கழக துணை மையங்களில் மொத்தம் 4,984 பேர் எழுதுகின்றனர். முதல் தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரையும், இரண்டாம் தாள் காலை 10.45 முதல் மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மூன்றாம் தாள் பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரையும் நடக்கிறது. இது தொடர்பான மேலும் விவரங்களை புதுவை பல்கலைக்கழக இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை