கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளில், 25 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறை அமலில் இல்லை, என, மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் செயல்படும் பெருவாரியான தனியார் பள்ளிகள், 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளதாக, போலி பட்டியல் தயாரித்து, அரசுக்கு அனுப்பி வருகின்றன. இதற்கு, கல்வித்துறை அதிகாரிகளும், உடந்தையாக உள்ளனர். கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிர்வாகம், அரசியல்வாதிகள் கைகளில் உள்ளதால், நடவடிக்கை எடுக்கவே, கல்வித்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதை தட்டி கேட்கும் நபர்களை, கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாது, மெட்ரிக் ஆய்வாளர் வரை மிரட்டுகின்றனர் என, மாணவ, மாணவிகளின் பெற்றோர் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து, இந்திய மாணவர் சங்க பிரதிநிதி ஒருவர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 25 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும் வகையில், இட ஒதுக்கீட்டால் பயனடைந்த ஏழை, எளிய மாணவர்களின் பெயர்களை, கல்வித்துறை அலுவலக அறிவிப்பு பலகைகளில் ஒட்டி வைக்க வேண்டும். மேலும், தனியார் பள்ளி, கல்லூரிகளில், 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய, கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இதை செய்யாத வரை, முறைகேடு நடந்த கொண்டு தான் இருக்கும், என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை