.மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் நாளை முதல் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் பாட புத்தகம் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 2013-14ம் கல்வி ஆண்டின் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2ம் தேதி முதல் பள்ளிகள் துவங்கப்பட உள்ளது. அதனையொட்டி 2014-15ம் கல்வி ஆண்டிற்கான இலவச கல்வி உபகரணங்களை, பள்ளி திறந்ததும் வழங்கும் வகையில் பாட புத்தகம் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் ஒரு லட்சத்து 86 ஆயிரம் மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று 9ம் வகுப்பிற்கான பாட புத்தகங்கள் வந்தடைந்தன.
உயர் நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான பாட புத்தகம் முழுமையாக வந்தடைந்ததையொட்டி நாளை முதல் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
அதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டார பள்ளிகளுக்கு நாளை 19ம் தேதியும், பண்ருட்டி 20ம் தேதி, சிதம்பரத்திற்கு 21ம் தேதி வழங்கப்படுகிறது. அதேப்போன்று விருத்தாசலத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் அதே தேதிகளில் முறையே விருத்தாசலம், திட்டக்குடி மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்டார பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் பாட புத்தகம் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 2013-14ம் கல்வி ஆண்டின் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2ம் தேதி முதல் பள்ளிகள் துவங்கப்பட உள்ளது. அதனையொட்டி 2014-15ம் கல்வி ஆண்டிற்கான இலவச கல்வி உபகரணங்களை, பள்ளி திறந்ததும் வழங்கும் வகையில் பாட புத்தகம் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் ஒரு லட்சத்து 86 ஆயிரம் மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று 9ம் வகுப்பிற்கான பாட புத்தகங்கள் வந்தடைந்தன.
உயர் நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான பாட புத்தகம் முழுமையாக வந்தடைந்ததையொட்டி நாளை முதல் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
அதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டார பள்ளிகளுக்கு நாளை 19ம் தேதியும், பண்ருட்டி 20ம் தேதி, சிதம்பரத்திற்கு 21ம் தேதி வழங்கப்படுகிறது. அதேப்போன்று விருத்தாசலத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் அதே தேதிகளில் முறையே விருத்தாசலம், திட்டக்குடி மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்டார பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை