அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 2014 - 15 கல்வியாண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைகள் தொடங்கவுள் ளன. எனவே, தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம், கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியற் மற்றும் கலைக்கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக வட்டார மையங் கள், சென்னை பல்கலைக்கழகம், பெரியார் பல் கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், தனியார் பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலைக்கல்லூரிகள் ஆகியவற்றில் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ பயிலுவதற்கான விண்ணப்பங்கள் வருகிற ஜுன் 2-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வழங்கப்படவுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 43 கல்வி நிறுவனங்களில் விண்ணப்ப விநியோகம் நடைபெறவுள்ளது. இந்த மையங்களில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை