தமிழகத்தில் தேர்தல் பணி யில் 3 லட்சம் பேர் ஈடுபடுத்தப் படுவர் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தேர்தல் பணியில் 3 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு வாக்குப் பதிவு தொடர்பாக 3 கட்ட பயிற்சி அளிக்கப்படுகின்றன. முதல்கட்ட பயிற்சி முடிந்துள்ளது. 2-வது கட்ட பயிற்சி வரும் 5-ம் தேதியும், 3-ம் கட்ட பயிற்சி தேர்தலுக்குமுந்தைய நாளும் நடத்தப்படும்.
தேர்தல் பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். புதிய வாக்காளர்களைக் கொண்ட துணை வாக்காளர் பட்டியல், வரும் 7-ம் தேதி தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்படும். மொத்தம் 60,418 வாக்குச்சாவடிகள் அமைக்கப்ப டுகின்றன.
வாக்குச்சாவடிகளில் மின்சாரம், குடிநீர், கழிப்பிடம், தற்காலிக சாய்தள பாதை ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். ஒரு தொகுதியில் 16 வேட்பாளர் களுக்கு மேல் போட்டியிட் டால் 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத் தப்படும். தற்போது 1.25 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் தயாராக உள்ளன. இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.
தமிழகத்தில் தேர்தல் பணியில் 3 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு வாக்குப் பதிவு தொடர்பாக 3 கட்ட பயிற்சி அளிக்கப்படுகின்றன. முதல்கட்ட பயிற்சி முடிந்துள்ளது. 2-வது கட்ட பயிற்சி வரும் 5-ம் தேதியும், 3-ம் கட்ட பயிற்சி தேர்தலுக்குமுந்தைய நாளும் நடத்தப்படும்.
தேர்தல் பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். புதிய வாக்காளர்களைக் கொண்ட துணை வாக்காளர் பட்டியல், வரும் 7-ம் தேதி தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்படும். மொத்தம் 60,418 வாக்குச்சாவடிகள் அமைக்கப்ப டுகின்றன.
வாக்குச்சாவடிகளில் மின்சாரம், குடிநீர், கழிப்பிடம், தற்காலிக சாய்தள பாதை ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். ஒரு தொகுதியில் 16 வேட்பாளர் களுக்கு மேல் போட்டியிட் டால் 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத் தப்படும். தற்போது 1.25 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் தயாராக உள்ளன. இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை