தமிழக கூட்டுறவு சங்க தேர்தலுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என, கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.தமிழக அரசு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள், சென்னையில், நேற்று அளித்த பேட்டி:தற்போது,
பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்கும், 7,297 பதவிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. ஆனால், கூட்டுறவுத் துறையில், 450 சார் - பதிவாளர்கள்; 600 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட, 1,150 பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியில் உள்ள பலர், புதியவர்களாகவும், பெண்களாகவும் உள்ளனர். அதனால், தேர்தல் பணியில் அனுபவம் உள்ள, பிற துறை ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, வேட்புமனு தாக்கல் மற்றும் ஓட்டு எண்ண, வட்டார அளவில் மையங்களை அமைத்து, உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் பணி ஊழியர்களுக்கு, இயல்பு பணிகளில் இருந்து விலக்களித்து, கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.
புதிய ஊழியர்களுக்கு, தேர்தல் குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.தமிழகத்தில், அந்தந்த மாவட்ட கலெக்டர்களை, தேர்தல் பார்வையாளர்களாக நியமித்து, கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். இந்த கோரிக்கைகளைஅரசு ஏற்காவிட்டால், தேர்தல் பணியை புறக்கணிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்கும், 7,297 பதவிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. ஆனால், கூட்டுறவுத் துறையில், 450 சார் - பதிவாளர்கள்; 600 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட, 1,150 பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியில் உள்ள பலர், புதியவர்களாகவும், பெண்களாகவும் உள்ளனர். அதனால், தேர்தல் பணியில் அனுபவம் உள்ள, பிற துறை ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, வேட்புமனு தாக்கல் மற்றும் ஓட்டு எண்ண, வட்டார அளவில் மையங்களை அமைத்து, உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் பணி ஊழியர்களுக்கு, இயல்பு பணிகளில் இருந்து விலக்களித்து, கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.
புதிய ஊழியர்களுக்கு, தேர்தல் குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.தமிழகத்தில், அந்தந்த மாவட்ட கலெக்டர்களை, தேர்தல் பார்வையாளர்களாக நியமித்து, கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். இந்த கோரிக்கைகளைஅரசு ஏற்காவிட்டால், தேர்தல் பணியை புறக்கணிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை