Ad Code

Responsive Advertisement

TRB : அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயி ரம் பேர் ஆன்லைனில் விண் ணப்பித்திருப்பதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரியத் தின் தலைவருமான (பொறுப்பு) டி.ஜெகந்நாதன் தெரிவித்தார். மறு அறிவிப்பின் படி எழுத்துத் தேர்வானது செப்டம்பர் மாதம்16-ம் தேதி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

1325 காலியிடம் இதற்கிடையே, தையல், ஓவி யம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப் பாசிரியர் பதவியில் 1325 காலி யிடங்களை நிரப்புவதற்கான எழுத் துத்தேர்வு செப்டம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement