Ad Code

Responsive Advertisement

தமிழகம் முழுவதும் 40 மையங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் கணினி பயன்பாட்டை தெரிந்து கொள்ளவும் வகுப்பறையோடு தகவல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கவும் தேவைப்படும் கல்விசார் கணினி வளங்களை தயார் செய்து கொள்வதற்கு கணினி பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

இதற்காக 2017-2018ம் கல்வியாண்டில் 32 மாவட்டங்களிலும் பணிமனைகள் அமைத்து மாதந்தோறும் 2 பயிற்சி என்ற வீதத்தில் பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது. அதன்படி 2017-2018ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 40 மையங்களில் 80 பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட உள்ளது.

இன்டர்மீடியட் மற்றும் அட்வான்ஸ்டு’ என மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டு ஆசிரியர்களின் கணினி பயன்பாட்டின் முன்னறிவை சோதித்து அதனடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும். இந்த மூன்று நிலைகளிலும் பயிற்சி பெற தகுந்த ஆசிரியர் மாவட்டம் தோறும் ‘டயாக்னிஸ் டெஸ்ட்’ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 40 மையங்கள் மூலம் தகவல் தொழில்நுட்பத்தில் இன்று முதல் வருகிற 22ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement