Ad Code

Responsive Advertisement

உ.பி - கழிப்பறை சுத்தம்; கண்காணிக்க ஆசிரியர்கள்

உ.பி., மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், உ.பி., மாநிலத்துக்கான துாய்மை இந்தியா திட்ட ஊரக இயக்குனர் விஜய் கிரண் ஆனந்த், அனைத்து மாவட்ட பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்காக, பள்ளி வளாகத்திலேயே தனித்தனி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களே சுத்தம் செய்கின்றனர்.

தெருக்களை சுத்தம் செய்பவர்களே, இப்பணியில் ஈடுபடுவதால், கழிப்பறைகளை சரிவர சுத்தம் செய்வதில்லை. கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கவும், துப்புரவு ஊழியர்கள் முறையாக சுத்தம் செய்கின்றனரா என்பதை கண்காணிப்பதற்கு, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement