விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது,வெள்ளிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.
இப்பள்ளியில் 50 மாணவர்கள் பயில்கின்றனர். தலைமை ஆசிரியை திருமதி.M.சாந்தி, உதவி ஆசிரியர் திரு.G.மூர்த்தி. இப்பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்பட்ட phonetic method எனப்படும் ஆங்கில ஒலி உச்சரிப்பு முறை குறுந்தகட்டினை பயன்படுத்தி ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படுகிறது.இப்பள்ளி மாணவர்கள் 30 நாட்களில் ஆங்கில ஒலிகளை சரியாக உச்சரித்து, சரளமாக வாசிக்கவும் கற்றுக்கொண்டார்கள்.மேலும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் கூட நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுகின்றன.
மிககுறுகிய காலத்திலேயே மாணவர்கள் மிகச்சிறந்த முறையில் ஆங்கிலம் கற்பதை கண்டுவியந்து,கிராம பொதுமக்கள் ரூபாய் 1 லட்சம் செலவில் பள்ளிக்கு வண்ணம் தீட்டி, கலையரங்கம் அமைத்து கொடுத்தனர்.இதன் விளைவாக 2014-2015 ஆம் ஆண்டின் மாவட்டத்தின் சிறந்த பள்ளி விருது இப்பள்ளிக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டது.
இப்பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள projector மற்றும் பெருந்திரையை பயன்படுத்தி அனைத்து பாடங்களும் சிறப்பாக கற்பிக்கப்படுகிறது. "தாயெனப்படுவது தமிழ் " என்ற காணொலி குறுந்தகட்டினை பயன்படுத்தி ஆடிபாடி தாய்மொழியை கற்கிறார்கள். ஆங்கிலத்தில் மட்டுமல்ல தமிழும் பிழையின்றி சரளமாக வாசித்து எழுதுகின்றனர். கல்வி துறை அதிகாரிகள்,phonetic Director,தாயெனப்படுவது தமிழ் குறுந்தகடு Director ஆகியோர் இப்பள்ளியை பார்வையிட்டு, இப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை கண்டு வியந்து பாராட்டினார்கள்.
இப்பள்ளி மாணவர்களின் ஆங்கில வாசிப்பு திறன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதின் விளைவாக சமூக ஆர்வலர்கள் பலர் தாங்களாகவே முன்வந்து பள்ளிக்கு ஒலிப்பான் ,ஒலிபெருக்கி வழங்கினர். மேலும் மாணவர்கள் அமர்ந்து படிக்க 6 வட்ட மேசைகள் 50 நாற்காலிகளும் வாங்கி கொடுத்தனர்.
இப்பள்ளி வளர்ச்சி நிலையை அறிந்த " திண்டிவனம் மணிலா நகர் அரிமா சங்கம் " இப்பள்ளிக்கு ருபாய் 1 லட்சம் மதிப்பில் பள்ளி சுவர் முழுவதும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள கற்றல் திறன்களை ஓவியங்களாகவும், கருத்துகளாகவும் வரைந்து கொடுத்தனர். அவை ஒவ்வொன்றும் மாணவர் ஒவ்வொருவருக்கும் சேதி சொல்லும் போதி மரமாக காட்சியளிக்கின்றனர்.
ஓய்வு நேரத்திலும் மாணவர்களை கற்றலில் ஈடுபடுத்தும் நோக்கில் "Joyful learning" ( மகிழ்ச்சியான கற்றல்) சூழலை உருவாக்கயுள்ளது.இவ்வரங்கத்தை 09.06.2017 அன்று திண்டிவனம் சார் ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை