தினமும் பள்ளிக் கல்விக் கல்வித்துறை சார்ந்தஏதேனும் ஒரு அறிவிப்புகள் வெளியாகி மாற்றத்தைஎதிர்நோக்கி வருகிறது.
கடந்த வாரத்தில் பொதுத்தேர்வுகளில் தரவரிசை வெளியிடும் முறையை ரத்துசெய்துள்ள தமிழக அரசு, மேல்நிலைக் கல்வியில்பாடத்திட்ட மாற்றம் மற்றும் தேர்ச்சி முறை மாற்றம்உள்ளிட்ட சீர்திருத்தங்களையும் அறிவித்துள்ளது.
அடுத்த மூன்றாண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும்கட்டாயமாக
பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ)பாடத்திட்டத்தைவிட, தமிழக அரசின் பாடத்திட்டம்தரமானதாக இருக்கும் என்றும் தமிழக அரசுஅறிவித்திருக்கிறது.
வரும் கல்வி ஆண்டிலிருந்து (2017-2018) பிளஸ் 1வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும்அறிவித்து அரசாணை வெளியிட்டு இருக்கிறது. புதியதேர்வு முறையின் படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2பாடத்துக்கான மதிப்பெண் பாடவாரியாக 200-யில்இருந்து 100 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருஆண்டும் ஒட்டுமொத்த மதிப்பெண் 1200-யில் இருந்து600 ஆகக் குறைந்துள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2இறுதி தேர்வுக்குப் பிறகு ஒருங்கிணைந்த மதிப்பெண்சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 1 முடித்துவிட்டு,பிளஸ் 2 செல்லவிருக்கும் மாணவர்களுக்கு 1200மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்படுமா அல்லதுபுதிய முறைப்படி 600 மதிப்பெண்களுக்குத் தேர்வுநடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு,அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி "இந்தஆண்டு ப்ளஸ் 1 முடித்து, ப்ளஸ் 2 செல்லும்மாணவர்களுக்கு எப்போதும் போல் 1200மதிப்பெண்களுக்குத் தேர்வும், இந்த ஆண்டு ப்ளஸ் 1சேர்ந்து அடுத்த ஆண்டு ப்ளஸ் 2 செல்லும்மாணவர்களுக்குத்தான், 600 மதிப்பெண்களுக்கு பொதுதேர்வும், ஒருங்கிணைந்த சான்றிதழும் வழங்கப்படும்"என்று அறிவித்து இருக்கிறார்.
பாடத்திட்டத்தில் தமிழக வரலாறு, கலாசாரம்,பண்பாடு, மற்றும் மரபு சார்ந்த பாடங்களைஇணைப்பது, பள்ளியிலேயே போட்டித்தேர்வுகளுக்குதனி வகுப்புகள் போன்ற தமிழக அரசின் அதிரடிமுடிவுகள் மாணவர்களின் எதிர்காலமுன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்கிறார்கள்கல்வியாளர்கள். தொடர்ந்து மூன்று ஆண்டுகள்பொதுத் தேர்வினை சந்திப்பது மாணவர்களுக்கு கடும்மன அழுத்தத்தை உண்டாக்கலாம் என்றும் மற்றொருதரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துஇருக்கிறார்கள்.
அரசின் அறிவிப்பு குறித்து ஆசிரியர்களும்மாணவர்களின் மனவோட்டம் என்ன என்பதைஅறிந்துகொள்ள அவர்களிடமும் பேசினோம்.
சேலம் ஜலகண்டபுரம் அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியாமெர்லின் "தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு நடத்தும்போது, மாணவர்கள் கவனம் சிதறாமல்படிப்பில் கவனம் செலுத்துவார்கள். இதனால்,மாணவர்கள் விடலைப்பருவத்தில் தவறாக தடம்மாறிச்செல்லும் வாய்ப்புகள் குறையும். 11ஆம் வகுப்புபாடங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்அதிகரிக்கும். நிர்வாக ரீதியாக மூன்று ஆண்டுகள்தொடர்ந்து பொதுத் தேர்வு நடத்துவதில்ஆசிரியர்களுக்கும், பள்ளி ஊழியர்களுக்கும் சிலசிக்கல்கள் இருக்கக்கூடும். இருப்பினும் இந்தத் திட்டம்வரவேற்கத்தக்கது" என்கிறார்.
கன்னியாகுமரி செயின்ட் மேரிஸ் கோரெட்டிமேல்நிலைப் பள்ளியில் தற்போது 10ஆம் வகுப்புமுடித்து ப்ளஸ் 1 சேர்ந்திருக்கும் மாணவி லெரின்டி.ஜிண்டா "அரசின் புதிய அறிவிப்பால் நாங்கள்அதிகமாக மதிப்பெண் பெறவே வாய்ப்புகள் அதிகம்.எங்களுக்கு ஓராண்டில் அதிக அழுத்தம் கொடுத்துபடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலும்,மதிப்பெண் சான்றிதழில் ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2மதிப்பெண்கள் ஒரு சேர வரவிருப்பதால் கூடுதல்மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உள்ளது" என்கிறார்.
பள்ளிக்கல்வி துறையின் மாற்றங்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர்மற்றும் கல்வியாளர் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு "பள்ளிக்கல்வி துறையின் அறிவிப்புகள் வரவேற்கிறோம்.நிதிச்சுமை இல்லாத இதுபோன்ற நடவடிக்கைகளைஅரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைஅளிக்கிறது. மேலும், இந்தத் திட்டங்களை திறம்படநிறைவேற்ற வேண்டும் என்றால், பாடவாரியாகஆசிரியர்களுக்கான பணியிடங்களை உருவாக்கவேண்டும். பொத்தாம் பொதுவாகத் தேவைக்கேற்பஆசிரியர்களின் எண்ணிக்கையில் இருக்கிறார்கள்என்று கூறக்கூடாது. பள்ளிவாரியாக ஆசிரியர்களின்விவரங்களை அரசு வெளியிட வேண்டும். பள்ளிகளில்ஆசிரியர் பணி காலியிடங்களாக இருக்கக்கூடாது.ஜூன் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்வரைஆசிரியர்கள் கட்டாயம் பள்ளியில் இருக்க வேண்டும்.ஆசிரியர்களுக்குக் கற்றல்-கற்பித்தல் பணியைத் தவிரவேறெந்த பணியையும் கொடுக்கக் கூடாது.இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான்இந்தத் திட்டம் வெற்றியை நோக்கிப் பயணிக்கும்"என்றவர், இன்னும் சில வேண்டுகோள்களையும் முன்வைத்தார்.
"கடந்த 20 வருடங்களாகப் பள்ளிகளில் கற்பித்தல்முறை மற்றும் மதிப்பீடு முறை சரியான முறையில்இல்லை. மாணவர்கள் ப்ளஸ் 1 பாடங்களுக்குமுக்கியத்துவம் கொடுக்காமல் நேரடியாக ப்ளஸ் 2பாடங்களைப் படித்து வருகிறார்கள்.
தனியார் நிறுவனங்கள் பள்ளிக் கல்வி என்பதைக்கற்றலுக்கான இடமாகப் பார்க்காமல், அதை ஒருவியாபார சந்தையாகவே நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற புகார்களை அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்ற போதும், அரசு இதற்கான எந்தவிதநடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
தற்போதுதான் அண்டை மாநிலங்களைப் பார்த்துதமிழகமும் ப்ளஸ் 1க்கான பொதுத் தேர்வு முறையைஅறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில், ஒரு மாணவர்ப்ளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லைஎன்றாலும் கூட அவர் பிளஸ் 2 படிப்பினைத்தொடரலாம் என்பது கூடுதல் வசதி. பிளஸ் 2 படிக்கும்ஆண்டில் பிளஸ் 1-க்கான தேர்வுகளை மீண்டும் எழுதிதேர்ச்சி பெறலாம்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இது கல்லூரிசெமஸ்டர் முறை போன்றது. எப்படி கல்லூரியில் முதல்செமஸ்டரில் ஒருவர் தேர்ச்சி பெறவில்லை எனில்,அவர் இரண்டாவது, மூன்றாவது செமஸ்டர்களில்மறுபடியும் அந்தத் தேர்வினை எழுதித் தேர்ச்சிபெறுகிறார்களோ, அந்த முறைதான் இதிலும்கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால் கட்டாயம்மாணவர்களுக்கு இது பயனளிக்கும்.
மேலும், மதிப்பெண் பாடவாரியாக 200-லிருந்து 100-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்தான்குறைக்கப்பட்டுள்ளதே தவிர கட்டாயம் தரம்குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்த 100மதிப்பெண் என்பது, எழுத்துத் தேர்வுக்கு 70மதிப்பெண்களும், செய்முறை தேர்வுக்கு 20மதிப்பெண்கள், அகமதிப்பீடுக்கு 10 மதிப்பெண்கள்என மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில்அகமதிப்பீடு என்பது அசைன்மென்ட், பராக்ட்டிகல்அல்லது ஃபீல்ட் விசிட் என்று மாணவர்களின்படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக அமையும்.
இணைய வழி கற்றல் மேலாண்மை தளம் என்ற, 'ஆன்லைன்' கற்றல் திட்டத்தை, பள்ளிக் கல்வித்துறைஅறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான டிஜிட்டல் பணிகள்தற்போது துவங்கப்பட்டுள்ளன. 'இ-லேர்னிங்' இணையதளத்தில், மாணவர்கள், தங்கள் பெயரைப் பதிவுசெய்து கொள்ளலாம். அவர்களுக்குப் பயன்பாட்டுகுறியீடு எண் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.இதைப் பயன்படுத்தி அவர்கள் எப்போதுவேண்டுமானாலும் தேர்வு எழுதி பயிற்சிஎடுத்துக்கொள்ளலாம். இதுவும் மாணவர்கள் திறனைஅதிகரித்துக் கொள்வதற்கான ஓர் வாய்ப்பு.
சில கல்வி விமர்சகர்கள் ப்ளஸ் 1 பொதுத்தேர்வுக்குஎதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இவர்களின் எதிர்ப்புமாணவர்களைப் பழிவாங்குவதற்காக ஒரு செயலாகும்.ஆறு பாடங்களை படித்துத் தேர்வு எழுத வேண்டியஇடத்தில், 12 பாடங்களைப் படித்து தேர்வு எழுதவேண்டும் என்று கூறுவது முறையல்ல. படிக்கவேண்டிய பாடங்களின் சுமையும் கூடிவிடும்என்பதனால் இதுபோன்ற விமர்சனங்களைக்கைவிடுவதே சிறந்தது" என்றும் வேண்டுகோள்வைக்கிறார் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு.
கற்றதை மனப்பாடம் செய்து மதிப்பெண்பெறுவதையே குறிக்கோளாக வைத்திருக்கும்நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, மாணவர்களின்சிந்தனையையும், படைப்பாற்றலையும் ஊக்குவித்துபயன் பெரும் வண்ணம் தமிழக பள்ளிகல்வித்துறையில் அடுத்தடுத்த மாற்றங்கள் அரங்கேறிவருகிறது. இவற்றை அடுத்தடுத்து எப்படிச்செயல்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றிஇருக்கிறது என்றே கூறலாம். மாணவர்களின்முன்னேற்றத்தை முன்னெடுக்கும் அடுத்தடுத்தஅறிவிப்புகளாகக் காத்திருக்கிறோம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை