Ad Code

Responsive Advertisement

மார்ச் 31- வரை நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு

நீட் தேர்வு எழுதும் மையத்தை மாற்ற நேற்று கடைசி நாளான அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இம்மாதம் மார்ச் 31- வரை தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.



  மருத்துவ பட்டப்படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான "நீட்' தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (சிபிஎஸ்இ) நாடுமுழுவதும் ஆண்டு தோறும் நடத்துகிறது.

 இந்த நுழைவுத் தேர்வில் இருந்து சில மாநிலங்களுக்கு கடந்த ஆண்டு விலக்கு அளித்திருந்த நிலையில், நடப்பாண்டில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் 8,02,594 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த வருடம் 11,35, 104 பேர் விண்ணப்பித்துள்ளனர். மார்ச் 24 முதல் மார்ச் 27( நாளை) வரை http://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு மையத்தை தெரிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்த நிலையில் தேர்வு மையத்தை மார்ச் 31-ம் தேதிவரை மாற்றிக்கொள்ளலாம் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்வு மையங்களாக சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருச்சி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக, நாமக்கல், நெல்லை மற்றும் வேலூர் சேர்க்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement