எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மதிப்பீடு செய்யும்பணி ஏப்ரல் 1-ந் தேதியும், பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 5-ஆம் தேதியும் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். கணினி அறிவியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த 27-ஆம் தேதி தேர்வு முடிந்துவிட்டது. உயிரியியல் பாடத்தை விருப்பபாடமாக எடுத்த மாணவர்களுக்கு வரும் மார்ச் 31-ஆம் தேதி தேர்வு முடிவடைகிறது. 10-ஆம் வகுப்பு தேர்வு கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்.பத்தாம் வகுப்பு தேர்வு செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) முடிவடைந்தது.பிளஸ்-2 தேர்வு முடிவு மே 12-ஆம் தேதியும், 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதியும் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியைத் தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி செய்துள்ளார்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்போது பிழை இன்றி இருக்கவேண்டும் என்றும், மதிப்பெண் கூட்டல் சரியாக இருக்கவேண்டும் என்றும், தவறாக மதிப்பீடு செய்யப்பட்டால் கண்டிப்பாக விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு தண்டனை உண்டு என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.10-ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
தமிழ் முதல் தாளுடன்விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற உள்ளது. பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்குகிறது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிப்பில் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர்என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை