Ad Code

Responsive Advertisement

கே.வி., பள்ளிகளில் 'அட்மிஷன்' துவக்கம்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பதிவு, 8ல் துவங்கியுள்ளது. மார்ச், 10 வரை விண்ணப்பிக்க, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.


மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான பதிவு துவங்கிஉள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படும், கே.வி., பள்ளிகளில், 'அட்மிஷன்' கிடைப்பது அரிதானது.
இந்நிலையில், 8 முதல், கே.வி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான பதிவு துவங்கியுள்ளது. http://admission.kvs.gov.in/OLAKVS/ என்ற இணைய தளத்தில், தங்களின் பெயர், விபரங்களை பதிவு செய்ய வேண்டும். ஒன்றாம் வகுப்புக்கு மட்டும், தற்போது பதிவு செய்ய முடியும். மார்ச், 10 மாலை, 4:00 மணி வரை, பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்
பட்டுள்ளது. மார்ச், 20ல், தேர்வு செய்யப்பட்டமாணவர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும்.
இரண்டாம் வகுப்பு முதல் மற்ற வகுப்புகளுக்கு, ஏப்., 5 காலை, 8:00 மணி முதல், மாணவர் சேர்க்கை பதிவு துவங்குகிறது. ஏப்., 18 மாலை, 4:00
மணி வரை பதிவு செய்யலாம். ஏப்., 25க்கு பின், தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement