பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் முன், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை பாய உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 8ல், துவங்குகிறது. மாநிலம் முழுவதும், 2,500 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடக்க உள்ளது. பொதுத் தேர்வு முடிவுகளை,
மே முதல் வாரத்தில் வெளியிட, அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்பின், பிளஸ் 1 வகுப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படுவர். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு, பிப்., 2 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இவை, 1,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. 'பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டிய மாணவர் சேர்க்கைக்கு, தனியார் பள்ளிகள் தற்போதே விண்ணப்பங்கள் வழங்குவது விதிகளை மீறிய செயல்' என, பள்ளிக் கல்வி, மெட்ரிக் இயக்குனரகங்களுக்கு, பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர்.எனவே, உரிய நடவடிக்கை எடுக்க, விதிமீறிய பள்ளிகள் குறித்த பட்டியலை தயாரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை