ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசால் கொண்டு வரப்படும் அவசரச் சட்டத்துக்கு அனுமதி அளிக்க உள்துறை அமைச்சகம் சம்மதம் தெரிவித்திருப்பதாக மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை கூறினார்.
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசால் கொண்டுவரப்படும் அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்த அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வருவது குறித்தும் தமிழகம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் குறித்தும் விளக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்.பி.க்கள் இன்று சந்தித்தனர்.
மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இது குறித்து தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், "அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் அவசியம். எனவே, மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினோம்.
அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க உள்துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டுள்ளார் என்றார்.
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசால் கொண்டுவரப்படும் அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்த அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வருவது குறித்தும் தமிழகம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் குறித்தும் விளக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்.பி.க்கள் இன்று சந்தித்தனர்.
மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இது குறித்து தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், "அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் அவசியம். எனவே, மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினோம்.
அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க உள்துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டுள்ளார் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை