1ஜிபி தினசரி வரம்பை மீறி ஜியோ ஹை-ஸ்பீட் தரவு பயன்படுத்துவது எப்படி? ரிலையன்ஸ் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் சலுகையின் கீழ் மார்ச் 31 வரை இலவச டேட்டாவை வாடிக்கையாளர்கள் தினசரி பயன்பாடு எல்லையுடன் பெற்று வருகிறார்கள்.
பூஸ்டர் பேக் 1ஜிபி என்ற தரவு எல்லையை மீறி அதிக வேகத்தில் மீண்டும் உலவ நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் பூஸ்டர் பேக்குகளை பயன்படுத்த முடியும். இதற்கான செலவாக நிறுவனம் 6ஜிபி பேக் ரூ.301/- என்றும் மற்றும் 1ஜிபி பேக் ரூ.51/- என்றும் நிர்ணயித்துள்ளது. இதை ஆக்டிவேட் செய்வதும் மிகவும் எளிமையே.!
வழிமுறை #01
உங்கள் மொபைலில், மைஜியோ பயன்பாட்டை திறக்கவும். உள்நுழைந்து லாக்-இன் அல்லது ரிஜிஸ்டர் செய்யவும். உங்கள் ஜியோ தொலைபேசி எண் தான் உங்கள் பயனர் பெயராகும். இப்போது, நீங்கள் ஜியோ பயன்பாடுகளின் ஒரு பட்டியலை பார்ப்பீர்கள் இப்போது மை ஜியோ என்பதற்கு அருகிலுள்ள ஓபன் என்பதை டாப் செய்யவும்.
வழிமுறை #02
யூஸேஜ் என்பதை டாப் செய்து - டேட்டா என்பதை டாப் செய்யவும். நீங்கள் 1ஜிபி என்ற டேட்டா எல்லை கடந்து விட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்த இதை செய்ய வேண்டும். ஜியோ வேகம் எப்போதுமே நிலையானதாக இருக்காது ஏனெனில் மெதுவான இணைப்பில் இருக்க முடியும். ஆக டேட்டா எல்லையை சோதிப்பது அவசியமாகிறது.
வழிமுறை #03
நீங்கள் வரம்பை கடந்து விட்டீர்கள் என்றால், பேக் ஐகானைடாப் செய்து மீண்டும் மெயின் ஸ்க்ரீனுக்கு திரும்பி போகவும். ரீசார்ஜ் ஐகானை டாப் செய்யவும், பின்னர் பூஸ்டர் ஐகானை டாப் செய்யவும். நீங்கள் விரும்பும் திட்டத்தை தேர்வு செய்து வலது பக்கத்தில் விலை ஆப்ஷனை டாப் செய்யவும். அதன் வழியாக நீங்கள் ஜியோமணி ஆப்பிற்குகொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு கிரெடிட், டெடிபிட் அல்லது நெட் பேங்கிங் வழியாக கட்டணம் செலுத்த முடியும்.வழக்கமான 4ஜி வேகம் அவ்வளவு தான் இப்போது நீங்கள் வழக்கமான 4ஜி வேகத்தில் உலவ முடியும். 6ஜிபி பேக் மூலம்நீங்கள் ரூ.4 சேமிக்க முடியும், அதன் தரவு எல்லை தினமும் மறுகட்டமைக்கப்படும் மற்றும் இந்த பேக் 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை