'சமையல், 'காஸ்' சிலிண்டருக்கான கட்டணத்தை, 'ஆன்லைன்' மூலம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டருக்கு, ஐந்து ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், 'பெட்ரோல் பங்க்குகளில், பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்கள், மின்னணு முறையில் அதற்கான பணம் செலுத்தினால், 0.75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்' என, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
சிறப்பு சலுகை:
இந்நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளன.
ரூ.5 குறைப்பு:
இதன்படி, காஸ் சிலிண்டரை ஆன்லைனில் புக் செய்யும் வாடிக்கையாளர்கள், ஆன்லைன் வாயிலாகவே அதற்கான தொகையை செலுத்தினால் சிலிண்டருக்கான விலையில், ஐந்து ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும் என, அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன; இது, பணமற்ற பரிவர்த்தனையை மேலும் ஊக்குவிக்கும் என, எண்ணெய் நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை