2017-18-ம் கல்வி ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு தமிழ் உள்பட 8 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
8 மொழிகளில் நுழைவுத்தேர்வு வருகிற 2017-2018-ம் கல்வி ஆண்டு முதல் அகில இந்திய அளவில் மருத்துவ இளநிலை பட்டப் படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்.) நுழைவுத்தேர்வை இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, வங்காளம், அசாமி ஆகிய 8 மொழிகளில் நடத்த மத்திய அரசு தீர்மானித்து உள்ளது மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநிலங்களில் உள்ள ஒதுக்கீட்டின் கீழ் சேர தகுதி பெறுவார்கள். நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை நடத்துவது குறித்து மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா டெல்லியில் கடந்த மே மாதம் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. சம வாய்ப்பு மாநில கல்வி வாரிய பாட திட்டத்தில் படித்து தேர்வான மாணவர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மருத்துவ கல்வியில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளை தவிர்க்கும் வகையிலும் மாநில மொழிகளில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை