இன்ஜி., கல்லுாரிகளில் காலியாக உள்ள, ஒரு லட்சம் இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங்குக்கு, இன்று நேரில் விண்ணப்பிக்க வேண்டும். இன்ஜி., கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பொது கவுன்சிலிங், ஜூலை, 21ல் முடிந்தது; 84 ஆயிரத்து, 352 இடங்கள் நிரம்பின. 1,01,318 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களை நிரப்ப, துணை கவுன்சிலிங், நாளை நடக்கிறது. அதில் பங்கேற்க, இன்று காலை, 9:00 மணி முதல், 5:30 மணி வரை, சென்னை அண்ணா பல்கலைக்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
'பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்; ஏற்கனவே கவுன்சிலிங்கில் பங்கேற்று இடஒதுக்கீடு பெற்ற வர்கள், இந்த கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் செயலர் இந்துமதி அறிவித்துள்ளார். கூடுதல் விவரங் களை, https://www.annauniv.edu/tnea2016/ என்ற இணையதளத்தில் காணலாம். ஆனால், அண்ணா பல்கலை விளம்பரத்தில், துணை கவுன்சிலிங்குக்கு நேரில் விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடாததால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
எனவே, கூடுதலாக ஒரு நாள் அவகாசம் அளித்து, கவுன்சிலிங் தேதியில் நேரில் வந்தாலும் அவர்களை பதிவு செய்து, இடங்களை ஒதுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். துணை கவுன்சிலிங் நடக்கும் தகவலை, அனைத்து மாணவர்களுக்கும் உரிய நேரத்தில் சேரும் வகையில் வெளியிடாமல், வெறும் விளம்பர அறிவிப்பாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளதால், பல மாணவர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடும் சூழல் உள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை