'பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில், ஐந்து பேர் குழுவை, பிப்., 26ல், அரசு அமைத்தது. அந்தக் குழு, மார்ச், 28ல் கூடியது.
ஆனால், அதன் உறுப்பினர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்ரமணியம் பங்கேற்கவில்லை. இதற்கிடையில், 'எங்களிடம் கருத்து கேட்க வேண்டும்' என, அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், குழுவினர் சந்திக்கவில்லை.சட்டசபையில், இதுகுறித்து நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், 'வல்லுனர் குழு அறிக்கை அளித்ததும் முடிவு செய்யப்படும்' என்றார்.
அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், 'குழுவில், இருவர்
பதவியை ராஜினாமா செய்து விட்டனரே; குழு எப்படி கூடும்' என, கேள்வி எழுப்பினார். அதற்கு மறுநாள் பதிலளித்த அமைச்சர் பன்னீர்செல்வம், 'வேறு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர்' என்றார்.அதன்படி, வல்லுனர் குழுவை மாற்றி அமைத்தும், குழுவின் பதவி காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்தும், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்ரமணியத்திற்கு பதிலாக, 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்' நிறுவன பேராசிரியர் பிரிஜேஷ் சி புராகித், உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை