அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல், 15ல் துவங்கியது. இதுவரை, 'ஆன்லைன்' மூலம், 2.38 லட்சம் பேர் தங்கள் பெயர், விவரங்களை பதிவு செய்துள்ளனர்.
அவர்களில், 1.70 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்தி பதிவு செய்துள்ளனர். மே, 31ம் தேதி வரை மட்டுமே, ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியும். பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, ஜூன், 4ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக்கு விண்ணப்ப பிரதியை அனுப்ப வேண்டும். எனவே, ஆன்லைன் விண்ணப்ப பதிவுக்கு, இன்னும், மூன்று நாட்களே அவகாசம் உள்ளது. அதற்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என, பல்கலை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை