Ad Code

Responsive Advertisement

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், ஆகியோருக்கு, 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம், அகவிலைப்படி உயர்த்தப்படும். அதை தொடர்ந்து, மாநில அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படியை, மாநில அரசுகள் உயர்த்தும்.


இந்த ஆண்டு ஜனவரியில் உயர்த்த வேண்டிய அகவிலைப்படியை, மத்திய அரசு மார்ச் மாதம், 6 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும், 6 சதவீதம் அகவிலைப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதன்படி, அகவிலைப்படி, 119 சதவீதத்தில் இருந்து, 125 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு அலுவலர்களுக்கு, 366 முதல், 4,620 ரூபாய் வரை, கூடுதலாக கிடைக்கும். அகவிலைப்படி உயர்வு, ஜனவரி, 1ம் தேதி முதல் கணக்கிட்டு, ரொக்கமாக வழங்கப்படும். இதன் மூலம், 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement