பிளஸ்- 2 கணினி அறிவியல் தேர்வுக்கு நான்கு வகையான வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வுத்துறை செய்திக்குறிப்பு: பிளஸ்-2 கணினி அறிவியல் தேர்வு இன்று (21ம் தேதி) நடக்கிறது. இதில் 30 பக்கங்களுக்குகோடு இல்லாத விடைத்தாள் வழங்கப்படும். மேலும் 75 ஒரு மார்க் அப்ஜெக்டிவ் வகை வினாக்களுக்கு விடை எழுத வேண்டும்.
இதற்கு ' ஆப்டிகல் மார்க்கிங் ரெசக்னிஷன்' என்ற ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்படும்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் இதுபோன்ற விடைத்தாள் பயன்படுத்தப்படுகிறது.இந்த ஓ.எம்.ஆர்., விடைத்தாள் சேதம் அடையாமல் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். விடைத்தாள் முகப்பில், பெயர் மற்றும் பதிவெண் சரியாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். விடைகளை குறிக்கும் கட்டங்களை கருப்பு பால்பாய்ன்ட் பேனாவை பயன்படுத்தி 'ஷேடு' செய்யவேண்டும்.
விடைத்தாளில் மாணவர்கள், ஆசிரியர் கையெழுத்து இடும் போது அதற்கான கட்டத்தை கையெழுத்து தாண்டக் கூடாது. விடைத்தாள் சேதம் அடைந்தால் மாற்று விடைத்தாள் பெறலாம். 75 மதிப்பெண் 'அப்ஜெக்டிவ்' வகை கேள்வி என்பதால், 'காப்பி' அடிப்பதை தடுக்க நான்கு வகையான வினாத்தாள் வழங்கப்படுகிறது. அருகருகே தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெவ்வேறு வகையான வினாத்தாள் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை