Ad Code

Responsive Advertisement

'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்': 42 ஆண்டு கால போராட்டத்திற்கு வெற்றி

முன்னாள் ராணுவத்தினரின் 42 ஆண்டு கால (1973-2015) கோரிக்கையான 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை நேற்று மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

இதன் 42 ஆண்டு கால பின்னணி:
*கடந்த 1973ல் 3வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி அப்போதைய பிரதமர் இந்திரா, 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' முறையை ரத்து செய்தார். இதே ஆண்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ராணுவத்தினர் கடைசியாக பெற்ற சம்பளத்தின் அடிப்படையிலான ஓய்வூதியம் 70ல் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. 

* 1986ல் நான்காவது சம்பள கமிஷன் ரணுவத்தினரின் ஓய்வூதிய கோரிக்கையை நிராகரித்தது

* 1991ல் சரத் பவார் கமிட்டியும் மறுத்தது. ஒரு முறை மட்டும் ஓய்வூதியத்தை உயர்த்த அனுமதி அளித்தது.

* 1996ல் ஐந்தாவது சம்பள கமிஷனும் முன்னாள் ராணுவத்தினரின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.

* 2002ல் காங்., தேர்தல் அறிக்கையில் ஓய்வூதிய கோரிக்கையை சேர்க்குமாறு சோனியா கேட்டுக் கொண்டார்.

* 2006ல் ஆறாவது சம்பள கமிஷனும் கோரிக்கையை நிராகரிக்க, முன்னாள் ராணுவத்தினர் வெளிப்படையாக போராட துவங்கினர்.

* 2008ல் டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் முன்னாள் வீரர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். தங்களது பதக்கங்கள், விருதுகளை அரசிடம் திரும்ப அளிக்க முடிவு செய்தனர். இதனை அரசு கண்டு கொள்ளவில்லை.

* 2009ல் முன்னாள் வீரர்களை சந்திக்க அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மறுத்தார். இதையடுத்து பதக்கம், விருதுகளை ஜனாதிபதி மாளிகை ஊழியரிடம் ஒப்படைத்தனர்.

* 2011ல் ராணுவத்தினரின் ஓய்வூதிய கோரிக்கை ராஜ்ய சபா கமிட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

* ஆண்டுக்கு 8,000 கோடி முதல் 9,000 கோடி ரூபாய் வரை தேவைப்படும். இதற்கான நிதி ஆதாரம் இல்லை என்று கூறி அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.

* 2013ல் அரியானாவில் உள்ள ரேவரியில் நடந்த முன்னாள் ராணுவத்தினரின் பிரமாண்ட ஊர்வலத்தில் பங்கேற்ற நரேந்திர மோடி, ஓய்வூதிய கோரிக்கைக்கு ஆதரவு அளித்தார்.

* மோடி தலைகாட்டியதும் ஐ.மு., அரசு விழித்துக் கொண்டது. ஏப்ரல், 2014ல் இருந்து ஓய்வூதிய முறை அமல்படுத்தப்படும் என அறிவித்தது. இதற்காக ரூ. 500 கோடியை ஒதுக்கீடு செய்தது.

* மத்தியில் பா.ஜ., அரசு 2014ல் பதவி ஏற்ற பின்னரும் இழுபறி நீடித்தது. ஆனாலும் பிரதமர் மோடி மட்டும் ஓய்வூதிய முறையை அமல்படுத்துவதில் உறுதியாக இருந்தார்.

* கடந்த ஜூனில் 'ஜந்தர் மந்தர்' பகுதியில் மீண்டும் முன்னாள் வீரர்கள் போராட்டத்தில் குதிக்க, அரசுக்கு நிர்ப்பந்தம் அதிகரித்தது.

* 2015, செப்.,5ல் முன்னாள் ராணுவ வீரர்களின் 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை ஏற்பதாக மத்திய அரசு அறிவித்தது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement