குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெறுவதை ஒட்டி, தமிழகத்தில் அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆளுநர் கே.ரோசய்யாவின் அனுமதியுடன் பொதுத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
மறைந்த அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் வருகிற வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெறவுள்ளது. இதையொட்டி, அனைத்து அரசு-தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் வியாழக்கிழமை பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
மறைந்தவர், குடியரசு முன்னாள் தலைவர் என்பதால் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாற்று முறை ஆவணச் சட்டம் 1881-இன் கீழ் (Negotiable Instruments Act 1881) விடுமுறை விடப்படுவதாக பொதுத் துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியத்துடன் கூடிய விடுமுறை: மாற்று முறை ஆவணச் சட்டத்தின் கீழ், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அன்றைய தினத்துக்கான ஊதியம் அளிக்கப்படும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை