பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ3.18க்கு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ3.09 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் மாதத்துக்கு இருமுறை பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ3.18, டீசல் ரூ3.09 அதிரடியாக உயர்வு! கடந்த 15-ந் தேதி பெட்ரோல் விலை 82 காசுகளும், டீசல் விலை 61 காசுகளும் உயர்த்தப்பட்டன. இந்நிலையில் இன்று அதிரடியாக பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ3.18, டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ3.09 என்கிற அளவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்துள்ளன. இதனால் சென்னையில் ரூ.59.85-க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரிகள் உட்பட ரூ63.92க்கு இனி விற்பனை செய்யப்படும். அதேபோல் ஒரு லிட்டர் டீசல் இனி ரூ53.53 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும். நடாளுமன்றத்தில் மத்திய பொதுபட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்றுதான் தாக்கல் செய்திருந்தார். ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கான பட்ஜெட்டாக இது அமைந்திருந்தது என்ற பொது கருத்து வெளியாகி உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் மாதத்துக்கு இருமுறை பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ3.18, டீசல் ரூ3.09 அதிரடியாக உயர்வு! கடந்த 15-ந் தேதி பெட்ரோல் விலை 82 காசுகளும், டீசல் விலை 61 காசுகளும் உயர்த்தப்பட்டன. இந்நிலையில் இன்று அதிரடியாக பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ3.18, டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ3.09 என்கிற அளவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்துள்ளன. இதனால் சென்னையில் ரூ.59.85-க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரிகள் உட்பட ரூ63.92க்கு இனி விற்பனை செய்யப்படும். அதேபோல் ஒரு லிட்டர் டீசல் இனி ரூ53.53 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும். நடாளுமன்றத்தில் மத்திய பொதுபட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்றுதான் தாக்கல் செய்திருந்தார். ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கான பட்ஜெட்டாக இது அமைந்திருந்தது என்ற பொது கருத்து வெளியாகி உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை