பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ம.தி.மு.க., மாநில மாணவரணி செயலாளர் ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளுக்காக பல இடங்களில் அந்தந்த பள்ளிகளில் மையங்கள் அமைக்கின்றனர். வேறு பள்ளிகளில் அமைக்கப்படும் மையங்களுக்கு பிற பள்ளிகளில் இருந்து மாணவர்கள் 5 கி.மீ., பயணித்து தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் சிரமம் இன்றி நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். அதிக தூரம் பயணம் செய்வதால் மனநிலை பாதித்து விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. மாணவர்கள் படிக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி டி.ராஜா விசாரித்தார். மனுதாரர் வக்கீல் பி.சுப்பாராஜ் ஆஜரானார். பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை