மதுபோதையில் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், இடைநிலை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள கூவனூத்துபுதூர் நடுநிலைப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் பிரகாஷ். இவர் மதுபோதையில் பள்ளிக்கு வருவதாக புகார் எழுந்தது.
மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்களையும், பெற்றோர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கூ. பாண்டியராஜா அண்மையில் ஆய்வு செய்தார்.
இதனை அறிந்த ஆசிரியர் பிரகாஷ், புகார் அளித்த பெற்றோர்களை மீண்டும் திட்டினாராம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஆசிரியர் பிரகாஷை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், ஆசிரியர் பிரகாஷ் மீது விசாரணை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறைக்கு அறிக்கை அளித்துள்ளனர். அதன்பேரில், ஆசிரியர் பிரகாஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை