தமிழகத்தில், எஸ்.எம்.எஸ்., மூலம், மின் கட்டண விவரம் தெரிவிக்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, இன்று, துவக்கி வைக்கிறார்.தமிழகத்தில், வீடு, வணிகம், தொழிற்சாலை என, மொத்தம்,2.44 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர்.மின் கட்டணம் குறித்த விவரம், கணக்கு எடுக்கப்பட்டதில் இருந்து, கட்டண தொகையை, பணம், காசோலை, வரைவோலை, இணையதளம் என, ஏதேனும் ஒன்றின் வாயிலாக, 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
மின் வாரிய ஊழியர்கள், மின் பயன்பாடு குறித்து கணக்கெடுக்க செல்லும் போது, பலர் வீடுகளில் இருப்பதில்லை. இதனால், மின் நுகர்வோர், குறித்த காலத்திற்குள், மின் கட்டணம் செலுத்த தவறி விடுகின்றனர்.
இதையடுத்து, மின் பயன்பாடு, கட்டணம், பணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகிய விவரங்களை, எஸ்.எம்.எஸ்., மூலம், மின் நுகர்வோருக்கு தெரிவிக்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.இந்த சேவையை கேட்டு, நேற்று, வரை, 2.10 கோடி நுகர்வோர்கள், மின் வாரிய பிரிவு அலுவலகங்களில், மொபைல் எண்ணை பதிவு செய்துள்ளனர். எஸ்.எம்.எஸ்., வாயிலாக, மின் கட்டண விவரம் தெரிவிக்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, தலைமை செயலகத்தில், இன்று, காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.
மின் வாரிய ஊழியர்கள், மின் பயன்பாடு குறித்து கணக்கெடுக்க செல்லும் போது, பலர் வீடுகளில் இருப்பதில்லை. இதனால், மின் நுகர்வோர், குறித்த காலத்திற்குள், மின் கட்டணம் செலுத்த தவறி விடுகின்றனர்.
இதையடுத்து, மின் பயன்பாடு, கட்டணம், பணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகிய விவரங்களை, எஸ்.எம்.எஸ்., மூலம், மின் நுகர்வோருக்கு தெரிவிக்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.இந்த சேவையை கேட்டு, நேற்று, வரை, 2.10 கோடி நுகர்வோர்கள், மின் வாரிய பிரிவு அலுவலகங்களில், மொபைல் எண்ணை பதிவு செய்துள்ளனர். எஸ்.எம்.எஸ்., வாயிலாக, மின் கட்டண விவரம் தெரிவிக்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, தலைமை செயலகத்தில், இன்று, காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை