டெல்லி: மொத்த உள்நாட்டு உற்பத்தியின்மதிப்பில்(ஜிடிபி) 6 சதவீதத்தை கல்விக்காக செலவிட மனிதவள மேம்பாட்டு துறைஅமைச்சர் ஸ்மிருதி இரானி முடிவு செய்துள்ளார். மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தநடிகை ஸ்மிருதி இரானி பொறுப்பேற்றுள்ளார்.
டெல்லி சாஸ்திரி பவனில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தஅவர் தனக்கு இத்தனை பெரிய பதவி அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இது குறித்து இரானி கூறுகையில், ஜிடிபியில் 3.8 சதவீதம் கல்விக்காக செலவிடப்படுகிறது. இந்த அளவை 6 சதவீதமாக உயர்த்துவதே எனது முதல்வேலை. ஒரு நாட்டில் ஒராண்டுக்குள் உற்பத்தியான பொருள் மற்றும் சேவைகளின் மொத்த பண மதிப்பே அதன் ஜிடிபியாகும் (Gross Domestic Product GDP).
மேலும் தேசிய ஆன்லைன் நூலகம்அமைப்பதற்கும் முக்கியத்துவம்
அளிப்பேன் என்றார். மனிதவள மேம்பாட்டு துறைஅமைச்சரின் தலைமையில் உள்ள குழுக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலை அளிக்குமாறு இரானி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கேபினட் கூட்டத்தில் கலந்து கொண்டபிறகு தனது அலுவலகத்திற்கு வந்த இரானிமாநில வாரியான கல்வி
நிலை குறித்த தகவலை அளிக்குமாறு அதிகாரிகளிடம்கேட்டுள்ளார். மாநில வாரியான கல்வி நிலை குறித்து அமைச்சர் கேட்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
டெல்லி சாஸ்திரி பவனில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தஅவர் தனக்கு இத்தனை பெரிய பதவி அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இது குறித்து இரானி கூறுகையில், ஜிடிபியில் 3.8 சதவீதம் கல்விக்காக செலவிடப்படுகிறது. இந்த அளவை 6 சதவீதமாக உயர்த்துவதே எனது முதல்வேலை. ஒரு நாட்டில் ஒராண்டுக்குள் உற்பத்தியான பொருள் மற்றும் சேவைகளின் மொத்த பண மதிப்பே அதன் ஜிடிபியாகும் (Gross Domestic Product GDP).
மேலும் தேசிய ஆன்லைன் நூலகம்அமைப்பதற்கும் முக்கியத்துவம்
அளிப்பேன் என்றார். மனிதவள மேம்பாட்டு துறைஅமைச்சரின் தலைமையில் உள்ள குழுக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலை அளிக்குமாறு இரானி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கேபினட் கூட்டத்தில் கலந்து கொண்டபிறகு தனது அலுவலகத்திற்கு வந்த இரானிமாநில வாரியான கல்வி
நிலை குறித்த தகவலை அளிக்குமாறு அதிகாரிகளிடம்கேட்டுள்ளார். மாநில வாரியான கல்வி நிலை குறித்து அமைச்சர் கேட்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை