சமீபத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ-க்களின் சம்பளத்தை 55,000 ரூபாயிலிருந்து 1,05,000 உயர்த்தினார். இந்த அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தமிழக மக்கள் வறுமையில் தவித்து வரும் நிலையில் எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பள உயர்வு தேவையா?
வறுமை, விவசாயிகள் தற்கொலை, கல்விக் கடனைத் திருப்பி செலுத்த முடியாத நிலையில் தமிழகம் தவித்து வருகிறது. இந்த நிலையில் எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பள உயர்வு தேவைதானா?
சம்பள உயர்வு அளிப்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நாங்கள் தலையிட முடியாது. ஆனால், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள உயர்வு சரியானதுதானா என்பது பற்றி எம்.எல்.ஏ-க்கள்தான் முடிவு செய்ய வேண்டும்' என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி வழக்கைத் தள்ளுபடி செய்தது.
தமிழகத்துக்கு கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய் அளவுக்கு கடனிருப்பது பற்றி இந்தப் பொது மனுவில் குறிப்பிடப்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை