நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் வரை தூய்மை விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
‘இந்தத் திட்டத்தில் மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியர்களும் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். தூய்மை குறித்த நிகழ்ச்சிகள், பேரணிகள் ஆகியவற்றை நடத்தி விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ‘மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்துக்குப் பள்ளிகளும், கல்வி நிறுவனங்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதுகுறித்து தங்கள் பள்ளிக்கு அருகாமையில் உள்ள மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு விழிப்பு உணர்வு ஏற்படுத்த பேரணி மற்றும் பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்தலாம். தங்கள் பள்ளிகளில் நிகழ்த்திய பிரசாரம் மற்றும் தூய்மை நடவடிக்கைகள் குறித்த புகைப்படங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில், பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் சுகாதாரம் குறித்த தரநிலைகள் மதிப்பிடப்படும். பள்ளிகளுக்கு தரவரிசையும் வழங்கப்படும்’ என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “மாநில அரசுகளின் கல்வி அமைச்சர்கள், கல்வித்துறை அதிகாரிகள் தூய்மை குறித்த விழிப்பு உணர்வை இரண்டு வாரங்களுக்குள் நடத்த வேண்டும். ஓர் உணர்வுடன் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
‘இந்தத் திட்டத்தில் மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியர்களும் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். தூய்மை குறித்த நிகழ்ச்சிகள், பேரணிகள் ஆகியவற்றை நடத்தி விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ‘மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்துக்குப் பள்ளிகளும், கல்வி நிறுவனங்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதுகுறித்து தங்கள் பள்ளிக்கு அருகாமையில் உள்ள மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு விழிப்பு உணர்வு ஏற்படுத்த பேரணி மற்றும் பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்தலாம். தங்கள் பள்ளிகளில் நிகழ்த்திய பிரசாரம் மற்றும் தூய்மை நடவடிக்கைகள் குறித்த புகைப்படங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில், பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் சுகாதாரம் குறித்த தரநிலைகள் மதிப்பிடப்படும். பள்ளிகளுக்கு தரவரிசையும் வழங்கப்படும்’ என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “மாநில அரசுகளின் கல்வி அமைச்சர்கள், கல்வித்துறை அதிகாரிகள் தூய்மை குறித்த விழிப்பு உணர்வை இரண்டு வாரங்களுக்குள் நடத்த வேண்டும். ஓர் உணர்வுடன் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை