பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான, சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட, வல்லுனர் குழுவின் தலைவராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, ஏற்கனவே அமலில் இருந்த, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்' என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில், 2016 பிப்., 22ல், வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.
குழுவும், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து, ஏழு நாட்கள் கூட்டம் நடத்தி, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தது. இந்நிலையில், மத்திய அரசானது, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்துவதற்கான, சாத்தியக்கூறுகளை ஆராய, 2016 அக்., 21ல், ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளையும் பரிசீலித்து, வல்லுனர் குழு அறிக்கை தயாரிக்க இருந்தது. ஆனால், குழுவின் தலைவராக இருந்த, சாந்தா ஷீலா நாயர், திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, வல்லுனர் குழுவின் புதிய தலைவராக, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதரை, தமிழக அரசு நியமித்துள்ளது. குழுவானது, ஓய்வூதியம் குறித்த அறிக்கையை, நவம்பர் இறுதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை