சென்னை பல்கலையின் உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆக., 4 வரை, கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம்' என, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை பல்கலையின் தேர்வுத் துறையில், துணை தேர்வு தாமதமாக நடத்தப்படுவதாக புகார் எழுந்தது. ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதோர், உடனடி துணை தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அதன் முடிவு வருவதற்குள், கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விடுவதாக, மாணவர்கள் புலம்பினர்.
இது குறித்து, சென்னை பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சீனிவாசன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: சென்னை பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளுக்கான தேர்வுகளில், ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 2010 முதல், உடனடி துணை தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை மற்றும் முதுநிலையில், இறுதி பருவத் தேர்வில், ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மட்டும், இதில் பங்கேற்கலாம். ஆண்டுதோறும், மறுமதிப்பீடு முடிவு வந்ததும், துணை தேர்வு நடக்கும். இந்த ஆண்டு, ஜூலை, 29ல், துணை தேர்வுநடந்தது.
இதில், 1,080 பேர் பங்கேற்றனர்; இதன் முடிவு,இன்று வெளியாகிறது. எனவே, துணை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, உயர் கல்வியில் சேர, ஆக., 4 வரை,விண்ணப்பங்களை பரிசீலிக்கலாம். காலியிடங்கள் இருந்தால், கல்லுாரிகளும், சென்னை பல்கலையின் துறைகளும் இதை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை பல்கலையின் தேர்வுத் துறையில், துணை தேர்வு தாமதமாக நடத்தப்படுவதாக புகார் எழுந்தது. ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதோர், உடனடி துணை தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அதன் முடிவு வருவதற்குள், கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விடுவதாக, மாணவர்கள் புலம்பினர்.
இது குறித்து, சென்னை பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சீனிவாசன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: சென்னை பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளுக்கான தேர்வுகளில், ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 2010 முதல், உடனடி துணை தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை மற்றும் முதுநிலையில், இறுதி பருவத் தேர்வில், ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மட்டும், இதில் பங்கேற்கலாம். ஆண்டுதோறும், மறுமதிப்பீடு முடிவு வந்ததும், துணை தேர்வு நடக்கும். இந்த ஆண்டு, ஜூலை, 29ல், துணை தேர்வுநடந்தது.
இதில், 1,080 பேர் பங்கேற்றனர்; இதன் முடிவு,இன்று வெளியாகிறது. எனவே, துணை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, உயர் கல்வியில் சேர, ஆக., 4 வரை,விண்ணப்பங்களை பரிசீலிக்கலாம். காலியிடங்கள் இருந்தால், கல்லுாரிகளும், சென்னை பல்கலையின் துறைகளும் இதை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை