ரிலையன்ஸ் ஜியோபோன் முன்பதிவு செய்வது எப்படி?
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய பீச்சர்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜியோபோன் என அழைக்கப்படும் புதிய பீச்சர்போன் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 40-வது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.
செப்டம்பர் மாதம் வெளியிடப்பட இருக்கும் ஜியோபோன் சரியான விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் ஜியோபோனினை செப்டம்பர் மாதத்திற்குள் முன்பதிவு செய்ய முடியும்.
புதிய ஜியோபோனினை மை ஜியோ செயலி மூலம் முன்பதிவு செய்ய முடியும். ஜியோபோன் வங்குவோர் ஆகஸ்டு 24-ம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும். அதன்பின் முதலில் முன்பதிவு செய்தோருக்கு செப்டம்பர் மாதம் முதல் விற்பனை துவங்குகிறது.
ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் ஜியோபோன் விலை ரூ.0 என அறிவிக்கப்பட்டது. எனினும் வாடிக்கையாளர்கள் திரும்ப வழங்கப்படும் தொகையாக ரூ.1,500 செலுத்த வேண்டும். இந்த தொகை மூன்று ஆண்டுகளுக்கு பின் திரும்ப வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
4ஜி எல்டிஇ நெட்வொர்க்கில் இயங்கும் ஜியோபோன் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்ட செயலிகளை பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருப்பதால் வாய்ஸ் கமாண்ட் மூலம் போனினை இயக்க முடியும். இத்துடன் 24 மொழிகளை இயக்கும் வசதியும், 5 எண் அழுத்திப் பிடித்தால் அவசர அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
இத்துடன் ஜியோபோனில் என்எஃப்சி வசதியை வழங்க இருப்பதாகவும், விரைவில் இதற்கான மென்பொருள் அப்டேட் வழங்கப்படம் இருக்கிறது. மேலும் ஜியோபோனில் பயன்படுத்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை