தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகை பதிவேடு முறை அமலாக உள்ளது. இதற்காக, மாணவர்கள், ஆசிரியர்கள் விபரங்கள் சேகரிப்பு துவங்கி உள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவானது, தனியாக பதிவேட்டில் குறித்து வைக்கப்படுகிறது. இதில், பல முறைகேடுகள் நடப்பதாக, தொடர்ந்து புகார்கள் உள்ளன. அரசு உதவிகள் பெறும் வகையிலும், ஆசிரியர்கள் எண்ணிக்கையை தக்க வைக்கவும், அரசின் இலவச திட்டப் பொருட்களை பெறவும், கூடுதல் மாணவர்கள் உள்ளதாக, கணக்கு காட்டப்படுவதாக கூறப்படுகிறது.
'ஓபி'அதே போல, பல பள்ளிகளில், ஆசிரியர்கள் பணிக்கே வராமல், வந்ததாக கணக்கு காட்டுவதாகவும், சில ஆசிரியர்கள் சங்கங்களின் பொறுப்புகளில் உள்ளோர், பணிக்கு வராமல், 'ஓபி' அடிப்பதாகவும், அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவில் முறைகேட்டை தடுக்க, 'பயோ மெட்ரிக்' முறை கொண்டு வர,பள்ளிக்கல்வித் துறைதிட்டமிட்டது. ஆனாலும், இத்திட்டம் பல காரணங்களால், அமலுக்கு வராமல் இழுபறியாகி உள்ளது.
இந்நிலையில், ஆசிரியர்கள் அதிகமாக, 'ஓபி' அடிக்கும் அரசு தொடக்கப் பள்ளிகளில், முதற்கட்டமாக, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறையை அமல்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. கணினியில் பதிவுஇதற்காக, பள்ளிகள் வாரியாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முழு விபரங்களை, தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப, இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.இந்த விபரங்களை கணினியில் பதிவு செய்யவும், ஆக., மாதத்திற்குப் பின், 'பயோ மெட்ரிக்' முறையை, முழு வீச்சில் அமல்படுத்தவும், அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை