ஆன்லைன் படிப்புகளில் முறைகேடுகளை தடுக்க, மாணவர்களின் ஆதார் எண் மற்றும் வீடியோ பதிவு கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
'ஆன்லைன்' படிப்பிற்கு,ஆதார்,கட்டாயம் ,முறைகேட்டைதடுக்க, மத்தியஅரசு,அதிரடி மத்திய அரசு சார்பில், தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., கல்லுாரிகளிலும், மற்ற பல்கலைகளிலும், ஆன்லைன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அதே நேரம், ஆன்லைன் படிப்புகளில், ஆள் மாறாட்டம் மற்றும் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, மத்திய அரசின், பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், கல்லுாரிகள், பல்கலை கள் போன்றவற்றில், ஆன்லைன் படிப்புகளை துவங்கும் முறை, பயிற்சி யாளர்களின் நியமனம், கல்லுாரிகளுக்கு தேவையான தொழிற் நுட்பம் போன்றவை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்:
* அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், ஆன்லைன் படிப்பில் சேர, மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம்.ஆதார் தகவல்படி, தேர்வின் போது, மாணவர்களின் கைரேகை மற்றும் புகைப்படம் ஆய்வு செய்யப்படும்.
* தேர்வின் போது, ஆன்லைன் மூலம், வீடியோ எடுக்கப்பட்டு, அவற்றை, 10 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.இந்த வரைவு
விதிகள் குறித்து, கல்லுாரிகள் ,பல்கலைகள் தங்கள் கருத்துக்களை , ஆலோசனைகளையும், ugc.online20l7@gmail.com என்ற, இ - மெயில் முகவரிக்கு, ஆக., 31க்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை