அமரர் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களால் தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டில் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், 2014ம் ஆண்டில் ரூ.2000 ஊதியம் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.7000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
6 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களை முற்றிலும் தற்காலிக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட பணியிலிருந்து , அரசுப் பணிக்கு மாற்றி மனிதாபிபான அடிப்படையில் வாழ்வளிக்க வேண்டி, மாண்புமிகு தமிழக முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி செயலர் அவர்கள் தலைமையில் விரைவில் சென்னையில் கோரிக்கை மாநில மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
எனவே, கோரிக்கை மாநில மாநாடு நடத்துவது சம்மந்தமாக ஆயத்த கூட்டம் 9.7.2017 ஞாயிறு காலை மணிக்கு சிதம்பரம் ஆறுமுக நாவலர் நிலையத்தில் நடைபெறுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை