மதுரை பாரதி யுவ கேந்திரா நிறுவனர் நெல்லை பாலு தெரிவித்துள்ளதாவது:
இவ்வமைப்பு சார்பில் இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூகப் பணி, பரதநாட்டியம், பேச்சு, கவிதை உட்பட அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் எல்.கே.ஜி., -- பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு 'யுவஸ்ரீ கலா பாரதி' விருதும், கல்லுாரி மாணவர்களுக்கு 'சுவாமி விவேகானந்தர்' விருதும் மாவட்டம் தோறும் வழங்கப்படுகின்றன.
பரிசு பெற்றதற்கான ஆவணங்களுடன் வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் 15 நாட்களுக்குள், 'நிறுவனர், பாரதி யுவ கேந்திரா, ஜி102, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை, 625 016' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். விபரங்களுக்கு 94426 30815 எண்ணில் தொடர்புகொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை