பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு அறிவிப்பு
அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைகக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பி.ஆர்க் படிப்புக்கு மாணவர் சேர்க்கை மத்திய அரசின் நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைகழக தரப்பில் அறிவிக்கப்பட்டது.
பி.ஆர்க் கலந்தாய்வில் ஜே.இ.இ நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்களும் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு ஜே.இ.இ, நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அண்ணா பல்கலைகழகத்தில் பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஜே.இ.இ, நாட்டா தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ள இடங்கள் நீங்கலாக மீதமுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடத்த அண்ணா பல்கலைகழக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
அதுதொடர்பாக அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகம் முழுவதும் 6 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் ஆகஸ்ட் 12ம் தேதி பி.ஆர்க் நுழைவுத்தேர்வு நடக்கிறது. இதற்காக எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி பிரிவு மாணவர்கள் 1,000 பிற பிரிவு மாணவர்கள் 2,000 இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.
இதுதொடர்பாக அறிவிக்கை ஜூலை 24ம் தேதி வெளியிடப்படும். அன்று முதல் ஆன்லைன் பதிவு தொடங்கும். ஜூலை 31ம் தேதி, ஆன்லைன் பதிவு செய்ய கடைசி நாளாகும். ஆகஸ்ட் 7ம் தேதி ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். ஆகஸ்ட் 12ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்கும். ஆகஸ்ட் 18ம் தேதி நுழைவுத்தேர்வு மதிப்பெண் வெளியிடப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை