ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட ‘தன் தனாதன் ஆஃபர்’ மேலும் அதிக சலுகைகளோடு வேலிடிட்டியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ‘தன் தனாதன் ஆபர்’ என்ற சலுகையை வழங்கிவந்தது. அந்த ஆபர் இப்போது மேலும் சலுகைகளோடு வேலிடிட்டியும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ரூ.349, ரூ.399, ரூ.509 ஆகிய பிளான்களுக்கு அதிகமான 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்தால் 20 ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும். இந்த பிளானுக்கு 56 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. இதற்கு தினசரி பயன்பாட்டு அளவு கிடையாது. 20 ஜிபி காலியானாலும் 128 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவைப் பயன்படுத்த முடியும்.
ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 1 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த பிளானில் மொத்தமாக 84 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். இதில் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ் அனைத்தும் இலவசம். ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால் 56 நாள் வேலிடிட்டியுடன் 112 ஜிபி பயன்படுத்தலாம். இதைவிட அதிக தொகைகளில் உள்ள பிளான்களில் எந்த மாற்றமும் இல்லை.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை