பிரபல இயங்குதள நிறுவனமான மைக்ரோசாப்ட் விண்டோஸ் நிறுவனம், தனது அடுத்த விண்டோஸ் 10 அப்டேட்டில் பெயின்ட் அப்ளிகேஷனை நீக்க முடிவு செய்துள்ளது.
கணினி உலகில் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று சிறந்து விளங்கும் நிறுவனம் மைக்ரோசாப்ட் விண்டோஸ். இந்நிறுவனம் விண்டோஸ் இயங்குதள வரிசையில் சமீபத்தில் விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்தியது. கடந்த இயங்குதள வெர்ஷனான விண்டோஸ் 8-ல் கடினமாக உணரப்பட்ட மெனு ஆப்ஷன்கள் உட்பட சில விஷயங்கள் மாற்றப்பட்டன. முந்தைய மாடலை விட சொளகரியமாகவும், பாதுகாப்பானதாகவும் உருவாக்கப்பட்டது. மொபைல் இயங்குதள உலகில் தனது இடத்தை தவற விட்டாலும், கணினி உலகில் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் விண்டோஸ் 10 அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காகக் கூடுதல் வசதிகளுடன் சில அப்டேட்களையும் அறிமுகப்படுத்தியது. இந்த விண்டோஸ் 10-ன் அடுத்த அப்டேட்டில் கடந்த 32 வருடங்களாக உபயோகத்தில் இருந்த பெயின்ட் அப்ளிகேஷன் ப்ரோகிராமை நீக்கையுள்ளதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. 'பெயின்ட்', 1985-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை