TEACHERS REACTIONS ON HIGH COURT VERDICT
அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் காரணமா? உயர்நீதிமன்றம் கேள்வி.- நீதிபதிகள் தொடங்கி அரசியல் விவாதிகள் வரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பார்க்க வேண்டும்
அரசு ஊழியர்களின் குழந்தைகள்:-
- அரசு பேருந்தில் மட்டுமே பயணிக்க வேண்டும்.
- அரசு ஊழியர்களின் குழந்தைகள் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் அரசு மருத்துவ கல்லூரியில் (Government medical college -ல்)MBBS இடமளிக்க வேண்டும்
- அரசு ஊழியர்களின் குழந்தைகள் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் அரசு பொறியியல் கல்லூரியில் Government Engg. college -ல் / ANNA UNIVERSITY -ல் இடமளிக்க வேண்டும்
- அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் ஏன் சேர்க்கக்கூடாது????
- இவ்வாறு நீதிபதிகள் ஆணையிட்டால் அனைத்து தரப்பினரும் வரவேற்பார்களா?
1.தனியார் மருத்துவமனைகள் பெருக அரசு மருத்துவர்கள்தான் காரணமா?
2.தனியார் பேருந்துகளில் கூட்டம் ஏற அரசு பேருந்து நடத்துனரும் ஓட்டுநரும் காரணமா?
3.கட்டப்பஞ்சாயத்துக்கள் பெருக நீதித்துறையும் காவல் துறையும் காரணமா?.
4.கந்துவட்டி தொழில் பெருக வங்கிகள் காரணமா?
5.மக்களிடம் வருவாய் குறைந்ததற்கு வருவாய்துறை காரணமா?
6.ஒரு துறை நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அதை தனியாரிடம் அரசு ஏன்? ஒப்படைக்கிறது. தனியார் மட்டும் எப்படி லாபகரமாக நடத்த முடியும்.
7.எத்தனை நீதி அரசர்கள் தங்கள் பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள்?. அவர்கள் அரசு ஊழியர்கள் இல்லையா?
8.தனியார் பள்ளிகளை விரும்பும் பெற்றோர் தனியார் மருத்துவகல்லூரி பொறியியல் கல்லூரிகளில் தன் பிள்ளைகளை சேர்க்கட்டுமே. ஏன் அரசு கல்லூரிகளை நாட வேண்டும்.
9.உயர்நீதிமன்றம் நீதியை நிலை நாட்ட வேண்டும் எனகருதினால் அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் அனைத்து அரசு மருத்து/பொறியியல் கல்லூரி இடங்கள் என சட்டமியற்றட்டும்.அப்போது பாருங்கள் அரசுபள்ளியின் வளர்ச்சியை.
எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை சொல்பவர்கள் நடைமுறையை சிந்தித்து பாருங்கள்.
"POST YOUR COMMENTS IN COMMENT BOX"
8 Comments
Nethiadi.................
ReplyDeleteELLORUKKUM ILAITHAVARGAL ASIRIYARGAL
ReplyDeleteThe main reason behind this is the RTE Act 2009 has reserved 25% of the seats for the downtrodden section and the Govt. Is paying the fees for them
ReplyDeleteTherefore it is clear, where the fault is
These things must be highlighted in the Hon'ble Court and these issues must be taken to the public through awareness programme
சரியான கேள்வி. இதற்கு பதில் யாரேனும் கூறுவார்களா , ஆசிரியர்கள் மட்டும் பலிகடாவா?
ReplyDeleteஆசிரியர்களின்கேள்விகளுக்கு விடைகிடைத்தால் நீதிமன்றம் தீர்ப்பு எழுதுவது மிக எளிது.
ReplyDeleteதனியார் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டால், தேங்கிக்கிடக்கும் பல லட்சம் வழக்குகள் உடனடியாக 'பைசல்' ஆகிவிடும்.
ReplyDeleteஅருமையான பதில்
ReplyDeleteதானும் ஒரு அரசு ஊமழியர் எனறு மறந்து நீதிபதி கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. சரி அவரின் மகன்,மகளை ஏன் அரசு பள்ளியில் சேர்க்கவில்லை,போகட்டும் இப்போது அவரின் பேரப்பிள்ளைகளை சேர்த்து அவர் நமக்கேள்லாம் முன்மாதிரியாக இருப்பாரா......?அப்போதும் நாம் மாறவில்லை என்றால் இக்கேள்வியை கேட்கட்டும்
ReplyDeleteஅனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை