பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள்:
* மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு இல்லங்களில் தொழிற்பயிற்சி மேற்கொள்ள ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு.
* 6 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளின் குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய தாய்மார்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க கணினி கொள்முதல் ரூ.12.48 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.
* பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களையும் குழுக்களாக அமைத்து உதவுவதற்கான வளமையம் ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
* செவித்திறன் குறையுடையோருக்கு தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள சைகை மொழிப்பாளரை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய ரூ.1.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும்.
* ரூ.4.50 லட்சம் செலவில் யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் 6 வயதிற்க்குட்பட்ட குழந்தைகளில் மனவளர்ச்சி குறைகள் இருப்பதை கண்டறியும் திட்டம் செயல்படுத்தப்படும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை