கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 14 உறுப்பு மற்றும் 21 இணைப்பு கல்லூரி உள்ளது. இதில், 2017-18ம் கல்வியாண்டில் இளங்கலை படிப்பில் மொத்தம் 2,820 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதற்கு, கடந்த மே 12ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 21,015 மாணவர்கள், 28,014 மாணவிகள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 49,030 பேர் விண்ணப்பித்தனர்.
இந்த மாணவர்களுக்கான மதிப்பெண் தரவரிசை பட்டியலை நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி வெளியிட்டார்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிருத்திகா, கோவையை சேர்ந்த கீர்த்தனா ரவி, சேலத்தை சேர்ந்த சோபிலா, தருமபுரியை சேர்ந்த பழங்குடி இன மாணவி சவுமியா, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சாக்சைன் மற்றும் திண்டுக்கல் சேர்ந்த ஆர்த்தி ஆகிய மாணவிகள் கட் ஆப் மதிப்பெண் 200 பெற்று முதல் ஆறு இடங்களை பிடித்தனர்.
மேலும், 199.75 கட் ஆப் மதிப்பெண்ணை 4 பேர் பெற்றுள்ளனர். தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி முதல் 24ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. இதில், சிறப்புபிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 16ம் தேதியும், பொதுப்பிரிவு முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையும் நடக்கிறது. மாணவர்களின் தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு தொடர்பான தகவல்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை