அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்தாண்டு முதல் 'ஸ்மார்ட்' வகுப்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சில அரசு பள்ளிகளில் ஏற்கனவே 'ஸ்மார்ட்' வகுப்பு செயல்பாட்டில் உள்ளது.
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான செயல்வழி கல்வி 'இன்டர்நெட்' இணைப்புடன் கூடிய 'புரஜெக்டர்' மூலம் திரையில் ஒளிபரப்பப்பட்டு கற்பிக்கப்படும்.அதேபோல் ஐந்தாம் வகுப்பிற்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான படைப்பாற்றல் கல்வி திரை மற்றும் 'கம்ப்யூட்டர்' மூலம் நடத்தப்படும். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடப்பிரிவுகளும் திரை மூலம் கற்பிக்கப்படும்.
சிறந்த ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களும் பதிவு செய்யப்பட்டு, ஒளிபரப்பப்படும். இந்த முறையை இந்தாண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பயிற்சி விரைவில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ஸ்மார்ட்' வகுப்புக்கான அறை 20 க்கு 20 அடியில் தனியாக ஏற்படுத்தப்படும்.
இந்த முறையால் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தாலும், பாடம் கற்பிப்பது பாதிக்காது. காலிப் பணியிடங்கள் ஏற்படும்போது, பிற பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் 'லைவ்' மூலம் மாணவர்களுக்கு ஒளிபரப்பப்படும். இதனால் ஆசிரியர்கள் இல்லை என்ற குறை ஏற்படாது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது, என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை