ரூ.451 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 15 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.25 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் புன்னைப் புதுப்பாளையம் முனுகப்பட்டு மற்றும் பெரியகோளாப்பாடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.5 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள் ஆய்வகக் கட்டிடங்கள் கழிப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் ரூ.421 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் உதயச்சந்திரன் பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோவன் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை