தமிழ்நாட்டில் 37 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளில் 1058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியிடங்களாக இருக்கின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்து உள்ளது.
பொறியியல் பாடங்களுக்கான விரிவுரையாளர் பணிக்கு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் பொறியியல் அல்லாத பாடங்களுக்கான விரிவுரையாளர் பணிக்கு முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஓய்வுபெறும் வயது 58 என்பதால் விண்ணப்பிப்பதற்கு 57 வயது நிர்ணயித்து இருக்கிறார்கள். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 07.07.2017. எழுத்துத்தேர்வு 13.08.2017 அன்று நடைபெறும். பட்டியல் வகுப்பினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் விண்ணப்பக்கட்டணம் ரூ. 300. இதர பிரிவினருக்கு கட்டணம் ரூ. 600. ஆன்லைன் வழியாக கட்டணத்தைச் செலுத்தலாம்.
இந்தத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு பிரிவினருக்கான ஒதுக்கீடு, பெண்களுக்கான ஒதுக்கீடு, தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிக்கான ஒதுக்கீடு என்ற அடிப்படையில் பணி நிரப்பப்படும் என்றும் அறிவித்திருக்கிறது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்.
இந்த விண்ணப்பத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கான இணையதள முகவரி https://trbonlineexams.in/polytechnic/
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை